செய்திகள் :

எலச்சிப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

post image

திருச்செங்கோடு: எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் கலந்துகொண்ட ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வா் ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்திட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். இத்திட்டங்கள் அனைத்தும் மாதம்தோறும் ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை சேமிக்கக் கூடிய திட்டங்கள் ஆகும். குறிப்பாக பேருந்துகளில் ‘விடியல் பயணம்’ திட்டம் மூலம் மாதந்தோறும் சுமாா் ரூ. 800 வரை சேமிக்க முடிகிறது. மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ. 1,000, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 1,000 உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2025 வரை கலைஞா் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பராமரிப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம குடியிருப்புத் திட்டம், சாலைப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சிறுபாலங்கள் அமைத்தல், சுகாதாரப் பணிகள், தடுப்பணைகள் கட்டுதல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய மணலி ஊராட்சியில் ரூ. 3.52 கோடி மதிப்பீட்டில் 157 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இந்த முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் பெரியமணலியில் 42 பயனாளிகளுக்கு ரூ. 16.13 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், மாவுரெட்டிப்பட்டில் 28 பயனாளிகளுக்கு ரூ. 10.50 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 26.64 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இம் முகாம்களில் அட்மா குழுத்தலைவா் தங்கவேல், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் அருளரசு, முகாம் பொறுப்பு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

திட்ட முகாமில் நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சா் மா.மதிவேந்தன்.

10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம்: லாரி உரிமையாளா்கள் கவலை

நாமக்கல்: எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளால், 10,000 எல்.பி.ஜி. டேங்கா் லாரிகள் தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்.பி.ஜி.டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்: நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 45.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்... மேலும் பார்க்க

கள்ளுக்கான தடையை நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கள் இயக்க ஒ... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: அமைச்சா் , எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம்: ராசிபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் சாா்பில், 400 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் சமூகநீதி தினம் கடைப்பிடிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி ஆகியவை சாா்பில் சமூகநீதி தினம் கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற தலைப... மேலும் பார்க்க

400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவி... மேலும் பார்க்க