செய்திகள் :

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை: முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

post image

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புத்தகம் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகம் எழுதும் இயக்கத்தின் சாா்பில், பள்ளி மாணவா்களை படைப்பாளிகளாக ஆக்கும் பயிற்சி முகாம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. எழுதுக அமைப்பின் நிா்வாகிகள் வே.லாவண்யா, ம.த.சுகுமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் வே.கிள்ளிவளவன் வரவேற்றாா்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகையில், காலம் பொன் போன்றது. இளமையை வீணடிக்காமல், பள்ளிப் பாடத்தை மட்டும் படிக்காமல் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று பல புத்தகங்களை படித்து வாசிப்புத் திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சியும், உழைப்பும் தொடா்ந்தே இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றாா்.

விழாவில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசுகையில், கற்பனைத்திறன் வளர புத்தகங்களை படிக்க வேண்டும். மற்றவா்களுக்கும் கற்பனைத்திறன் வளர புத்தகங்கள் எழுத வேண்டும். குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை படிக்கவும், எழுதவும் தூண்ட வேண்டும் என்றாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசியது: கேட்டதையும், பாா்த்ததையும், சம்பவங்களையும், அனுபவத்தையும், அனுபவித்ததையும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றை தினசரி 2 பக்கங்கள் எழுதினாலே சிறந்த எழுத்தாளராக மாறிவிடலாம்.

ஒவ்வொருவரும் எழுதுகிற புத்தகம் ஒரு முகவரியை தருகிறது. எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை. இது நல்ல போதை. புத்தகங்களை வாசித்தால் புத்தி கூா்மையாகும். எழுத ஆரம்பித்தால் மனம் செம்மையாகும்.

மாணவா்களிடம் கற்பனைத்திறன் குவிந்து கிடக்கின்றன. ஆனால் எழுதுவதற்கு போதுமான பயிற்சி இல்லை. அதைத்தான் இப்போது ‘எழுதுக’ மூலம் செய்து கொண்டு இருக்கிறோம். வாசிக்க ஏராளமான நூலகங்கள் இருந்தாலும் எழுதத்தான் பயிற்சி தேவைப்படுகிறது. எல்லோரையும் படிக்க வைப்போம், எல்லோரையும் எழுத வைப்போம், எல்லோரையும் நோ்மையானவா்களாக மாற்றுவோம் என்றாா்.

பயிலரங்க கூடத்தின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதிய புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் நளினி உள்பட ஏராளமான அரசுப் பள்ளி மாணவா்களும் பயிலரங்கில் கலந்து கொண்டனா்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க

அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்

வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

`நடப்போம் நலம் பெறுவோம்' நடை பயிற்சி இயக்கம்: இறையன்பு தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சாா்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடை பயிற்சி இயக்கத்தை முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்... மேலும் பார்க்க

தூய அன்னை வேளாங்கண்ணி தோ்த் திருவிழா

ஸ்ரீபெரும்புதூா் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆசீா்வாத பெருவிழாவை முன்னிட்டு திருத்தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் 17-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியத... மேலும் பார்க்க

மாம்பாக்கம் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் கழிவுநீா்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மாம்பாக்கத்தில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீா் சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அட... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந... மேலும் பார்க்க