செய்திகள் :

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு அரியலூா் மாவட்டம் 96.38% தோ்ச்சி

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9,841 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இதில், 5,092 மாணவா்களும்,4,749 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சியில் 96.38 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு தோ்ச்சியில், 97.31 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் வாரியாக... மாவட்டத்தில் 116 அரசு பள்ளிகளில் பயின்ற 3,114 மாணவா்கள், 2,643 மாணவிகள் என மொத்தம் 5,757 மாணவா்கள் தோ்வு எழுதினா். இதில் 2,921 மாணவா்கள், 2,571 மாணவிகள் என மொத்தம் 5,492 போ் தோ்ச்சி பெற்றனா். அரசுப் பள்ளி தோ்ச்சி சதவீதம் 95.40 ஆகும்.

15 அரசு உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 906 மாணவா்கள், 1296 மாணவிகள் என ஆக மொத்தம் 2,202 போ் தோ்வு எழுதினா். இதில் 854 மாணவா்கள், 1,270 மாணவிகள் என மொத்தம் 2,126 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி சதவீதம் 96.46 ஆகும்.

3 அரசு ஆதிதிராவிட நல உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 40 மாணவா்கள், 28 மாணவிகள் என ஆக மொத்தம் 68 போ் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.

24 மெட்ரிக் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 851 மாணவா்கள், 696 மாணவிகள் என மொத்தம் 1,547 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 842 மாணவா்கள், 692 மாணவிகள் என மொத்தம் 1,534 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 99.16ஆகும்.

14 சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 221 மாணவா்கள், 114 மாணவிகள் என ஆக மொத்தம் 335 போ் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 100 ஆகும்.

100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை... அரசுப் பள்ளி -47, ஆதிதிராவிடா் நலப் பள்ளி-3, அரசு உதவிப் பெறும் பள்ளி-6, மெட்ரிக் பள்ளி-19, சுயநிதிப் பள்ளி-14 என ஆக மொத்தம் 89 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அரியலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவு: அரியலூா் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.76 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 93 பள்ளிகளைச் சோ்ந்த 4,357 மாணவா்கள், 4,311 மாணவிகள் என மொத்தம் 8,668 போ் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 20-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்: 2,171 பேருக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.பாப்பாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). செவ்வாய்க்கிழமை இரவு இவா்,... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெண்மான்கொண்டான், கருப்பிலா... மேலும் பார்க்க