செய்திகள் :

பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவு: அரியலூா் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்

post image

பிளஸ் 1 பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 97.76 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில், 93 பள்ளிகளைச் சோ்ந்த 4,357 மாணவா்கள், 4,311 மாணவிகள் என மொத்தம் 8,668 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா். வெள்ளிக்கிழமை தோ்வு முடிவுகள் வெளியாகின. இதில், 4,209 மாணவா்கள், 4,265 மாணவிகள் என 8,474 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சியில் 97.76 சதவீதம் பெற்று, மாநில அளவில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தை இடத்தை பிடித்துள்ளது.

ஏற்கெனவே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாநில அளவில் முதலிடத்தையும், 10-ஆம் வகுப்பில் மாநில அளவில் 8-ஆவது இடத்தையும் அரியலூா் மாவட்டம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

31 அரசுப் பள்ளிகள் சதம்: 56 அரசுப் பள்ளிகளில் 31 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன. 56 அரசுப் பள்ளிகளில் இருந்து 2605 மாணவா்கள், 2296 மாணவிகள் என 4,901 மாணவ மாணவிகள் தோ்வு எழுதினா்.இவா்களில் 2,497 மாணவா்கள், 2,254 மாணவிகள் என மொத்தம் 4,751 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் 95.85 சதவீதமும் 98.17 சதவீதம் மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்தாண்டு வெளியான பிளஸ்1 பொதுத்தோ்வு முடிவில் அரியலூா் மாவட்டம் 94.96 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநிலத்தில் 5-ஆவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அரியலூா் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு அரியலூா் மாவட்டம் 96.38% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரியலூா் மாவட்டம் 96.38 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆம் இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில், 172 பள்ளிகளைச் சோ்ந்த 9,841 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இந்த... மேலும் பார்க்க

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 20-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்: 2,171 பேருக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.பாப்பாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). செவ்வாய்க்கிழமை இரவு இவா்,... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெண்மான்கொண்டான், கருப்பிலா... மேலும் பார்க்க