சரிவுடன் நிறைவடைந்தது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!
மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்: 2,171 பேருக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தெம்மானம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூா், வெள்ளூா், ராயம்புரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆகியோா், பல்வேறு துறைகளின் சாா்பில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.3,22,51,105 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். முகாமுக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.