செய்திகள் :

குடும்பத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர்! அங்கோலாவில் தஞ்சம்!

post image

மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காபோன் நாட்டின் முன்னாள் அதிபர் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு வெளியேறி அங்கோலாவில் தஞ்சமடைந்துள்ளார்.

காபோன் நாட்டின் முன்னாள் அதிபரான அலி போங்கோ ஒண்டிம்பாவின் ஆட்சி கடந்த 2023-ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின், ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான இந்தப் புரட்சியினால் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், அதிபர் போங்கோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் தலைநகர் லிப்ரவில்லில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் மூலம் ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமா அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபரானார். பின்னர், அங்கோலா அதிபர் ஜோனோ லுரென்சோ மற்றும் அதிபர் நுகுமா ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலையான அவரது குடும்பத்தினர் காபோன் நாட்டைவிட்டு வெளியேறி அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவை அடைந்துள்ளதாக அதிபர் ஜோனோ லுரென்சோவின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காபோனின் முன்னாள் பிரதமரும், போங்கோ குடும்பத்தினரின் செய்தித்தொடர்பாளருமான அல்யின் க்ளவுடி பில்லி கூறுகையில், சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் பாங்கோவின் குடும்பத்தினர் சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுமார் 23 லட்சம் மக்கள் வாழும் காபோன் நாட்டை அதிபர் போங்கோவின் குடும்பத்தினர் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் மூலம் கபோனின் குடியரசுப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!

சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியத... மேலும் பார்க்க

எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் ப... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இன்று(மே 16) பேசியிருக்கிறார்.பாகிஸ்தானில் ராணுவத்தில் சேவையாற்றி உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாளான மே ... மேலும் பார்க்க

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!

காஸாவின் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் ஒரே நாளில் 93 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. காஸாவின் தெயிர் அல்-பலா மற்றும் கான்யூனிஸ் ஆகிய பகுதிகளின் மீது நேற்று (மே 15) நள்ளிரவு துவங்கிய இஸ்... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், இறுதியாக பேச்சுவார்த்தையில் இரு நாடு... மேலும் பார்க்க

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க