தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!
ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முறையும், ஊரகப் பகுதியாக இருந்தால் கட்டணமின்றி ஐந்து முறையும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
ஒருவேளை, ஒரு மாதத்துக்கான பணப்பரிவர்த்தனைக்கான அளவைக் கடந்துவிட்டால் அதன்பிறகு ஒவ்வொரு முறை ஏடிஎம் பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும் தொகை ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் வரிகளும் அடங்கும். இதற்கு முன்பு வரை இந்தக் கட்டணம் ரூ.21 ஆக இருந்தது. இது பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் சேவைக்குப் பொருந்தாது.
ஏற்கனவே, இது தொடர்பாக எச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கிவிட்டன.
அதாவது, ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.21+வரிக்கு பதிலாக தற்போது ரூ.23+ வரி என உயர்த்தப்பட்டுள்ளது. சில வங்கிகள், பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும், வங்கி இருப்பு நிலவரங்களைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் சில வங்கிகள், பணப்பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் சேவை அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளன.
சில வங்கிகள், பணப்பரிவர்த்தனைக்கு ரூ.23ம், வங்கி இருப்புகளை அறிந்துகொள்ள மட்டும் ஏடிஎம் சேவையை பயன்படுத்தினால் ரூ.11 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஏடிஎம்களில் பணம் எடுக்கப்படும் அளவு குறைந்து வருவதை ஆர்பிஐ தரவு காட்டுகிறது. அதாவது, கடந்த 2023 ஜனவரியில் ஏடிஎம் மூலம் 57 கோடி முறை பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்றும், இது 2024 ஜனவரியில் 52.72 கோடி முறையாகவும், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 48.83 கோடி முறையாகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண மாற்றம், வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.