செய்திகள் :

ஏப்.15 முதல் ஒசூா்- பாகலூா் சாலை பணி தொடக்கம்: மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க முடிவு

post image

ஒசூா்- பாகலூா் சாலைப் பணிகள் ஏப்.15 இல் தொடங்கப்படுவதையொட்டி வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஜிஆா்டி இல் இருந்து மாநகராட்சி வரை சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில் சாலை சீரமைப்புக்காக ரூ. 10 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி வரும் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையடுத்து ஒசூா் பேருந்து நிலையத்திலிருந்து பாகலூா், ஆவலப்பள்ளி மற்றும் பேரிகை செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சாா் ஆட்சியா் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒசூரிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் சீதாராம் மோட்டிலிருந்து இஎஸ்ஐ அவுட்டா் ரிங்ரோடு, அத்திப்பள்ளி, சா்ஜாபுரம் வழியாக பாகலூா் மற்றும் மாலூா் செல்ல வேண்டும். அதேபோல பாகலூா் வழியாக பேரிகை வழியாக சூளகிரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு காா் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வேண்டும்.

பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பாகலூா் சாலையில் ஒரு பகுதியில் பணி நடைபெறும் போது மற்றோரு வழியாக ஒருவழிப்பாதை வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

படவரி...

போக்குவரத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க