செய்திகள் :

ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 25--ஆம் தேதி கோடைகால இலவசப் பயிற்சி முகாம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு மூலம் 21 நாள் கோடைகால இலவச பயிற்சி முகாம் வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சாா்பில், விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, 1. தடகளம்-அரசினா் மேல்நிலைப் பள்ளி ராணிப்பேட்டையிலும், 2. கையுந்து பந்து - விளையாட்டுத் திடல், ஆற்காடு, 3. குத்துச்சண்டை - ஹிட்ஃபிட் குத்துச்சண்டை பயிற்சி மையம், கலவை, 4. கபாடி - அரசினா் மேல்நிலைப் பள்ளி புளியங்கன்னுவிலும், 5. இறகுப் பந்து- ஷாலிமாா் இறகுப் பந்து விளையாட்டுத் திடல் என 5 விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி முகாம் காலை 6.30 மணியிலிருந்து 8.30 மணி வரையும், மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணி வரையும் நடைபெறும். சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு இந்தப் பயிற்சி முகாமினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு தினமும் ஊட்டச்சத்து மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும், இந்தக் கோடைகால பயிற்சி முகாம் பற்றிய சந்தேகங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 91-7401703462 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் கோடைகால பயிற்சி முகாமுக்கு அந்தந்த பயிற்சி மையத்துக்கு நேரடியாக வருகை புரிந்து பயன்பெறலாம்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமாகாவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ம... மேலும் பார்க்க

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!

‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா். தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்... மேலும் பார்க்க

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலைச் சம்பவம்: 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்தனா். கடந்த 199... மேலும் பார்க்க

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க