செய்திகள் :

ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!

post image

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைக் கையாளும் பிரிவில் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான விடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் பலியாகினர். இந்த சம்பவமானது, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளைக் கையாளும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற விடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விடியோ பதிவு செய்யப்பட்ட நாள் குறித்து தெளிவாகத் தெரியாவிட்டாலும், விபத்து ஏற்பட்ட சில நாள்களில்தான் விடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், கொண்டாட்டத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

ஏர் இந்தியா ஊழியர்களின் கொண்டாட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 4 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விடியோ குறித்த வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஏர் இந்தியா எப்போதும் துணை நிற்கும். நிறுவனத்தில் கொண்டாட்டம் தொடர்பாக சமீபத்தில் வெளியான விடியோவுக்கு எங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில், இந்த தவறான நடத்தை மூலம் எங்களை மதிப்பிட முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களின் பொறுப்புணர்வு மீதான உறுதிப்பாட்டை மீண்டும் தெளிவுப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:நன்றியற்ற ஈரான் தலைவர்! டிரம்ப் குற்றச்சாட்டு!

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க

பைசா செலவில்லாமல் விண்வெளி சென்ற ராகேஷ் சர்மா! சுபான்ஷு சுக்லாவுக்கு ரூ.544 கோடி செலவு ஏன்?

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு ஏற்படவில்லை. ஆனால், சுபான்ஷு சுக்லாவுக்கு மட்டும் ஏன் செலவழிக்கப்படுகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்வதேச விண்வெளி நிலையத்து... மேலும் பார்க்க