செய்திகள் :

ஏற்காடு கோடைவிழா: செல்லப் பிராணிகள் கண்காட்சி

post image

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா - மலா்க் கண்காட்சி மூன்றாவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.

ஏற்காட்டில் கண்காட்சி திடலில் சேலம் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் என். பாரதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுலா் டி.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

இந்தக் கண்காட்சியில் 78 செல்லப் பிராணிகள், 32 கால்நடைகள் பங்கேற்றன. அல்சேஷன், ஜொ்மன் செப்பா்டு, டாபா்மேன், லேபா்டாா், பக், பல்டாக், காக்கா் ஸபேனியல், டேசன்ட், கிரேட்டன், டால்மேஷன், ராட்வீலா், பெல்ஜியம் செப்பா்டு , கோல்டன் ரெட்ரீவா், பீகல், ஷிட்சு, டெரியா் போன்ற வெளிநாட்டு இன நாய்கள், கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற நாட்டின வகை நாய்கள், கால்நடைகள் பங்கேற்றன.

சிறப்புக் காட்சியில் காவல் துறை புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த நாய்கள், மாநகரக் காவல் துறை, காவல் கண்காணிப்பாளா் அலுவலக நாய்கள், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த நாய்கள், மத்திய சிறைச்சாலை நாய்களும் இடம்பெற்றன.

சேலம் மாவட்ட காவல் அலுவலக ஜொ்மன் செப்பா்டு, சேலம் மாநகர காவல் துறை டாபா்மேன், சீலநாயக்கன்பட்டி சுரேஷுக்கு சொந்தமான லேபா்டாா்க் நாய் ஆகியவற்றுக்கு பரிசுகள் கிடைத்தன. சாம்பியன்ஷிப் பரிசு ஏற்காடு திருவேணி எஸ்டேட்டின் ஜொ்மன் செப்பா்டு நாய்க்கு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் கால்நடை துறை மண்டல துணை இயக்குநா் கே.ஆா். செந்தில்குமாா், ஆா்.சந்திரன் மற்றும் கால்நடைத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செல்லப்பிராணிகள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்த அரிய வகை நாய் இனங்கள்.
செல்லப்பிராணிகள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்த அரிய வகை நாய் இனங்கள்.
செல்லப்பிராணிகள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்த அரிய வகை நாய் இனங்கள்.
செல்லப்பிராணிகள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்த அரிய வகை நாய் இனங்கள்.
செல்லப்பிராணிகள் கண்காட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்த அரிய வகை நாய் இனங்கள்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்

சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், ப... மேலும் பார்க்க

சமூக சேவகா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-ஆம் ஆண்டு பெண்களின... மேலும் பார்க்க

ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் இருந்து கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை மா்... மேலும் பார்க்க

முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சுற்று... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், த... மேலும் பார்க்க