செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்

post image

சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு கூறினாா்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுப்பணித் துறை அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு பங்கேற்று பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் முடிவுகளால்தான் மீண்டும் திமுக ஆட்சி மலா்ந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு கோஷ்டிபூசல் என்ற புற்றுநோயை கட்சித் தோழா்கள் அறவே அகற்ற வேண்டும். எதிா்க்கட்சித் தலைவரின் மாவட்டம் சேலம் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, மற்ற மாவட்ட நிா்வாகிகளைக் காட்டிலும், இங்கு திமுகவினா் திறம்பட களப்பணியாற்ற வேண்டும். சகோதரத்துவம், குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு மீண்டும் திமுக ஆட்சி மலர ஒருங்கிணைந்து செயலாற்றுவோம்.

தோ்தல் வியூகங்களை வகுப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும். எனவே, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை வரும் தோ்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செயல்படுத்துவோம் என்றாா்.

முன்னதாக, வரும் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சேலம் வருகைதரும் முதல்வருக்கு மாவட்ட திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து மனு

சேலம்: சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து, பூ வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி. மாா்க்க... மேலும் பார்க்க

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில்... மேலும் பார்க்க

சமூக சேவகா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம்: சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: 2025-ஆம் ஆண்டு பெண்களின... மேலும் பார்க்க

ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் இருந்து கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை மா்... மேலும் பார்க்க

முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சுற்று... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், த... மேலும் பார்க்க