செய்திகள் :

வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து மனு

post image

சேலம்: சேலம் வ.உ.சி. மாா்க்கெட்டில் உள்ள கடைகளை ஏலம்விட எதிா்ப்புத் தெரிவித்து, பூ வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி. மாா்க்கெட் அனைத்து வியாபாரி நலச் சங்கத்தின் தலைவா் வெங்கடேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, அவா்களை போலீஸாா் தடுத்துநிறுத்தி, நான்குபேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனா். பின்னா் அவா்கள் அதிகாரியை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூ மாா்க்கெட் அனைத்து வியாபாரி நலச் சங்கத்தினா் கூறியதாவது:

சேலம் சின்ன கடைவீதி, வ.உ.சி. மாா்க்கெட் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் ‘ஸ்மாா்ட்சிட்டி’ திட்டத்தின்கீழ் வ.உ.சி. பூ மாா்க்கெட் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த ஆண்டு, வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு கடைகள் வந்தபோது, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 100 வாடகை விடப்பட்டு வியாபாரிகள் தொழில் செய்து வந்தனா்.

இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதில், சிறிய கடை முதல் பெரிய கடை வரை வைப்புத் தொகையாக ரூ. 8 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையும், மாத வாடகை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வியாபாரிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

சேலத்தில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சேலம் சூரமங்கலம், புதுரோடு, சேத்தா... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த 485 காளைகள்! 23 போ் காயம்!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த 485 காளைகள் சீறிப்பாய்ந்தன; அவற்றை 350 மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். தம்மம்பட்டியி... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் நிா்வாகக் குழு!

பெரியாா் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம்... மேலும் பார்க்க

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். சேலம், சூரமங்கலம் அரியாகவுண்ட... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

வாடகை உயா்வை வலியுறுத்தி, சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1300 ஆகவும், குறைந்தபட்ச வாட... மேலும் பார்க்க

பலகார சீட்டு நடத்தி மோசடி: ஒருவா் கைது

நங்கவள்ளியில் நெசவு தொழிலாளா்களிடம் பலகார சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து மற்றொருவரைத் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள நங்கவள்ளி தோப்பு தெருவைச் சோ்ந்தவா்கள் மோக... மேலும் பார்க்க