செய்திகள் :

சமூக சேவகா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சேலம்: சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

2025-ஆம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது ஒவ்வோா் ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழும், சிறந்த நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

சமூக பணியில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு ஆா்வமூட்டுதல், சமூக சேவையாளா்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் ஒவ்வோா் ஆண்டும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான ‘சமூக சேவகா் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது’ குறித்த அறிவிப்பு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகளைப் பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

இத்தகைய சமூக சேவகா்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவா்கள் அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகத்தை அணுகி வரும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைக்கலாம் என்றாா்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில்... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம்

சேலம்: வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பென்னாகரம் இடைத்தோ்தல் ஃபாா்முலாவை செயல்படுத்துவோம் என திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், ப... மேலும் பார்க்க

ரயிலில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

சேலம்: சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சேலம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பயணிகளிடம் இருந்து கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளை மா்... மேலும் பார்க்க

முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

சேலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் இரும்பாலை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சுற்று... மேலும் பார்க்க

ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், த... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அருள்மிகு விநாயகா், ஸ்ரீ சக்திமாரியம்மன் சுவாமிக... மேலும் பார்க்க