செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச் சந்தை!சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

post image

பங்குச்சந்தை இன்று(ஏப். 17) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்து வணிகம் நடைபெற்று வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,968.02 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.55 மணியளவில், சென்செக்ஸ் 653.60 புள்ளிகள் அதிகரித்து 77,697.89 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 171.50 புள்ளிகள் உயர்ந்து 23,608.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, எடர்னல் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

அமெரிக்காவின் வரி விதிப்பால் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, வரி விதிப்பு நிறுத்திவைப்பால் இந்த வாரம் தொடர்ந்து 4 ஆவது நாளாக ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றது.

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய... மேலும் பார்க்க

மார்ச்சில் புதிதாக 4,440 5ஜி நிலையங்கள்!

நாட்டில் மார்ச் மாதத்தில் மட்டும் கூடுதலாக 4,440 5ஜி இணைய சேவைக்கான நிலையங்கள் (கோபுரங்கள்) அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் பு... மேலும் பார்க்க

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க