செய்திகள் :

ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!!

post image

பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 29) ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,396.92 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

நண்பகல் 12 மணியளவில், சென்செக்ஸ் 37.41 புள்ளிகள் அதிகரித்து 80,255.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 6.45 புள்ளிகள் குறைந்து 24,322.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இண்டஸ்இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றுள்ளன.

சன் பார்மா, பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.85.25-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலரின் மீட்சி மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 85.25 ஆக முடிந்தது.... மேலும் பார்க்க

பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!

மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன. இருப்பி... மேலும் பார்க்க

ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா? மே 1 முதல் புதிய கட்டணம்!

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் ஆர்பிஐ கொண்டு வந்திருக்கும் மாற்றம் மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.வழக்கமாக ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் நகரமாக இருந்தால் கட்டணமின்றி மூன்று முற... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!

புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால... மேலும் பார்க்க

மே 2-ல் அறிமுகமாகிறது ஏசஸ் நிறுவனத்தின் இரு புதிய லேப்டாப்!

ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-16 (Asus ROG Strix G16), ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் லேப்டாப் ஜி-18 ஆ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ... மேலும் பார்க்க