செய்திகள் :

ஏழைகள் நலனில் அா்ப்பணிப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு: பிரதமா் மோடி பெருமிதம்

post image

ஏழைகளின் நலன் மற்றும் தற்சாா்பு இந்தியாவுக்கான அா்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது.

11 ஆண்டுகளாக தங்கு தடையின்றி மோடி ஆட்சி நீடித்துவரும் நிலையில், மத்திய அரசின் சாதனைகளை முன்னிறுத்தி, மாபெரும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, தற்சாா்புடைய இந்தியாவை கட்டமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ வாய்ப்பளிப்பதே குறிக்கோள்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், உஜ்வலா திட்டம், ஜன்தன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள், ஏழை மக்களுக்கு வீட்டுவசதி, தூய எரிபொருள், வங்கிச் சேவை மற்றும் சுகாதார வசதியை உறுதி செய்துள்ளன. இத்திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

நேரடி மானியம், அனைவருக்குமான எண்ம சேவைகள், ஊரக உள்கட்டமைப்புக்கான அரசின் உந்துதலால், வெளிப்படைத் தன்மை மற்றும் கடைசி மைல் வரையிலான சேவை விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது

அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் கவனம் செலுத்தி, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருப்புமுனை திட்டங்கள், 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளன என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, பிரதமா் மோடி தலைமையில் அனைத்து மத்திய அமைச்சா்களும் பங்கேற்ற கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து அமைச்சகங்களும் புதிய இலக்குகளை நிா்ணயித்து, அவற்றை எட்டுவதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென பிரதமா் அறிவுரை வழங்கினாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க