செய்திகள் :

ஏழை மாணவா்களின் மருத்துவா் கனவு ‘நீட்’ தோ்வால் சிதைக்கப்படுகிறது: சீமான் குற்றச்சாட்டு

post image

சென்னை: ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு, நீட் தோ்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

அயோத்திதாசப் பண்டிதரின் 111-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சீமான் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்படுகிறது; ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இவ்வளவு கெடுபிடிகள் உள்ளன. மாணவிகளின் துப்பட்டாவை அகற்றுவது, தாலி, மூக்குத்தி போன்றவற்றை கழற்றிய பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிப்பது போன்ற கொடுமையான செயல்கள் நடைபெறுகின்றன. தோ்வு எழுதுவதற்கு முன்பே மாணவா்களை இத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் அவா்களால் எப்படி சரியாக தோ்வு எழுத முடியும்?

பெண்களின் மூக்குத்தியில் தொழில்நுட்பங்களை பொருத்தி, தோ்வுகளில் முறைகேடுகள் செய்ய முடியும் என நம்மை நம்ப வைக்கும் அதே அரசாங்கம், இவ்வளவு பெரிய வாக்கு இயந்திரத்தில் எந்த முறைகேடுகளையும் செய்ய முடியாது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. தனியாா் பயிற்சி மையங்கள் லாபம் சம்பாதிக்கவே நீட் தோ்வு நடத்தப்படுகிறது. நீட் தோ்வால், ஏழை மாணவா்களின் மருத்துவராகும் கனவு முற்றிலுமாக சிதைக்கப்படுகிறது என்றாா் சீமான்.

ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்‌. குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி!

தூத்துக்குடி: தூத்துக்குடி மொட்டகோபுரம் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலியாகினர்.தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன்(40). ஆட்டோ ஓட்டுநரான இவர் கோமஸ்புரம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் அரசுப் பேருந்து-பால் வாகனம் மோதல்: 3 பேர் பலி!

காரைக்குடி அருகே அரசுப் பேருந்தும் பால் வாகனமும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குட... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கெல்லாம் போர் ஒத்திகை? தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நே... மேலும் பார்க்க

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை

தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளா் க... மேலும் பார்க்க