கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
ஐடிஐயில் சேர விண்ணப்பிக்காலம்
நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.
காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்களின் (அசல்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓராண்டு பிரிவு ரூ.230 மற்றும் ஈராண்டு பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகியவை வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற பெண் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ஆண் மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94990-55737, 04365-250126 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.