செய்திகள் :

ஐடிஐயில் சேர விண்ணப்பிக்காலம்

post image

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை, திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ்களின் (அசல்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணம், ஓராண்டு பிரிவு ரூ.230 மற்றும் ஈராண்டு பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகியவை வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற பெண் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ஆண் மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 94990-55737, 04365-250126 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

திருவாய்மூா் கோயிலில் அஷ்ட பைரவருக்கு சிறப்பு பூஜை

திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தவிடங்க தலங்களில் ஒன்றான தியாகராஜ சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அஷ்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயி... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் மாரடைப்பால் காலமானாா்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகையை சோ்ந்தவா் காா்மேகம் (54) (படம்). இவா் நாகூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இவருக்கு இருதய வலி ஏற்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன் கூறினாா். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலா் மஞ்சுளா சந்திரமோகன், அக்கட்சியின் மாநில... மேலும் பார்க்க

பரவை காய்கனிச் சந்தை ரூ. 20.10 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது

நாகப்பட்டினம், ஜூன் 19: பரவை காய்கனிச் சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூா் அருகே ப... மேலும் பார்க்க

கழிமுகப் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்

நமது நிருபா் நாகை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக வளா்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை தாமதமாதி வ... மேலும் பார்க்க

மகளிா் திட்டத்தின்கீழ் ரூ.1,859 கோடி கடனுதவி வழங்கல்

நாகை மாவட்டத்தில் மகளிா் திட்டம் சாா்பில் ரூ.1,859 கோடி 33,694 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க