செய்திகள் :

ஐடி நிறுவன சிஇஓ-க்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார்?

post image

கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் தலைமைச் செயல் அதிகாரியாக ஹெச்சிஎல் டெக்(HCL Tech) நிறுவனத்தின் சிஇஓ விஜயகுமார் இருந்தார்.

அவரது மொத்த ஆண்டு வருமாணம் ரூ. 94.6 கோடியாகும். அமெரிக்காவில் வசிக்கும் விஜயகுமார், அடிப்படை ஊதியமாக ரூ. 15.8 கோடியும், செயல்திறனுடன் கூடிய ஊக்கத்தொகையாக ரூ. 13.9 கோடியும், பங்கு ஊதியத்தொகையாக ரூ. 56.9 கோடியும், கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ. 1.7 கோடியும் பெற்றார்.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, விஜயகுமாரின் சம்பளம் கடந்தாண்டைவிட 7.9% அதிகரித்து காணப்பட்டது.

சம்பளப் பட்டியலில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முதலிடத்தைப் பிடித்த நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஊதிய விவரத்தைக் காண்போம்.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே. கிருத்திவாசன் ரூ. 26.5 கோடி பெற்றார். இது அவரின் கடத்தாண்டு பெற்ற ஊதியத்தைவிட 4.6% அதிகமாகும்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கின் ஊதியம் 22% உயர்ந்துள்ளது. அவரது மொத்த ஊதியம் 80.6% கோடியாகும்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற ஸ்ரீனிவாஸ் பல்லியா, தனது முதல் ஆண்டில் ரூ. 53.6 கோடியை சம்பளமாகப் பெற்றார்.

ஹெச்சிஎல் டெக் நிறுவனம் இந்த நிதியாண்டில் தங்களது ஊழியர்களின் சராசரி ஊதியத்தில் 17.6% அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் தற்போது 1,67,316 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதைத் தவிர அதன் துணை நிறுவனங்களில் 56,104 பேர் பணிபுரிகின்றனர்.

இதையும் படிக்க: 'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

HCL Tech CEO Vijayakumar was the highest-paid CEO among IT companies operating in India in the last financial year 2024-25.

மும்பையில் டெஸ்லாவின் முதல் சார்ஜிங் நிலையம்!

மும்பையில் சார்ஜிங் நிலையங்களை டெஸ்லா நிறுவனம் இன்று (ஆக. 4) திறந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு முதல் விற்பனையகத்தை (ஷோரூம்) டெஸ்லா திறந்த நிலையில், தற்போது முதல் சார்ஜிங் நிலையத்தையும் அமைத்த... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

ஜார்க்கண்ட், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் போன்றவர் மறைந்த ஷிபு சோரன் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.’ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம்)’ கட்சியை நிறுவி அதன் தல... மேலும் பார்க்க

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய 3 காரணங்கள் தெரியவந்துள்ளது. அவற்றைக் கேட்டால் நமக்கு ’அடேங்கப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ரஷியாவைச் சேர்ந்தவொரு இளம்பெண் இந்த... மேலும் பார்க்க

சிபு சோரன் மறைவு: ஜார்க்கண்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரனின் மறைவையொட்டி ஜார்க்கண்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நாளை(ஆஸ்ட் 05) விடுமுறை அ... மேலும் பார்க்க

சீன ஆக்கிரமிப்பு: 2019-ல் பாஜக எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

இந்தியாவின் 50-60 கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019லேயே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் 2,000 சதுர கிலோமீ... மேலும் பார்க்க

அலுவலகத்தில் பணியாற்றுபவரா நீங்கள்? ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வதில் புது வசதி!

அலுவலக பணியாளர்களுக்காக தனி மெனு வடிவமைக்கப்பட்டு உணவு ஆர்டர் செய்வதில் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ‘ஸ்விக்கி’. ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில், வழக்கமாக ஒவ்வொரு உணவகமாக ... மேலும் பார்க்க