செய்திகள் :

ஐபிஎல்: சென்னைக்கு எதிராக ஹர்திக் விளையாடமாட்டார்! ஏன்?

post image

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க : சாப்பிட பணமில்லாமல் கஷ்டப்பட்டவர் இன்று மும்பை அணியின் பெருமைமிக்க கேப்டன்: நீதா அம்பானி

ஹர்திக் விளையாடமாட்டார்

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடும் முதல் லீக் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்.

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியனஸ் அணி இரண்டு முறை மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, மும்பை அணி விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால், ஐபிஎல் விதிகளின்படி, மூன்றாவது முறை ஒரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

இதனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அணிக்கு மீண்டும் திரும்புவார்.

மேலும், சென்னைக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரில் யார் கேப்டனாக செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் டாப் 5 தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் தனிநபராக அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சாதனை படைத்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கி... மேலும் பார்க்க

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க