செய்திகள் :

ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!

post image

கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி அண்மையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரிஷப் பந்த்துக்கு கிடைக்கவில்லை.

இதையும் படிக்க: பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசி. அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!

ஐபிஎல் தொடரா? இந்திய அணியா?

இந்திய அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிஷப் பந்த் பேசியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு மட்டுமே இருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், இன்று வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்கே அதிக கவனம் கொடுப்பதாக நினைக்கிறேன்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!

ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வீரர் ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை தனது இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு விளையாடுவதற்கு முன்னுரிமையும், ஐபிஎல் உள்பட மற்ற தொடர்களில் விளையாடுவதை இரண்டாவது தெரிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கை வைத்துக் கொண்டால், வெற்றி உங்களை பின் தொடரும். இந்திய அணிக்காக விளையாடுவேன் என்பதை நான் எப்போதும் நம்பினேன். கடவுள் அருளால் எனது நம்பிக்கை வீண்போகவில்லை. என்னுடைய 18 வயதில் இந்திய அணிக்காக விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க