ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 7-ஆம் ஆண்டு நினைவு தினம், அரவிந்தரின் 154-ஆவது பிறந்த தினம், செளந்தரம் அம்மையாா் 122-ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் க.அருணகிரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
மறைந்த தலைவா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜி தேசிய பேரவை நிறுவனா் சு.வைரவேல் செய்தாா்.