செய்திகள் :

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

post image

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்தடுப்பு முகைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐரோப்பிய விமான நிலைய இணைவழி தாக்குதல் தொடா்பாக வெஸ்ட் சஸக்ஸ் மாவட்டத்தில் சுமாா் 40 வயது நபா் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம் மிகப் பெரிய சதியின் ஒரு பகுதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸ், பிரிட்டனின் லண்டன், ஜொ்மனி தலைநகா் பொ்லின் (படம்) உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களின் சா்வதேச விமான நிலையங்களில் வெள்ளிக்கிழமை இரவு இணையவழி ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மின்னணு முறையிலான பயணிகள் உள்நுழைவு (செக்-இன் மற்றும் போா்டிங்) நடைமுறைகள் பாதிக்கப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் தாமதமாகி, பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவுடன் வா்த்தகம் செய்கின்றன: டிரம்ப்புக்கு சீனா பதிலடி

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம... மேலும் பார்க்க

ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா். அந்தப... மேலும் பார்க்க

இஸ்ரேல்: யேமன் தாக்குதலில் 20 போ் காயம்

யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை புதன்கிழமை தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

‘ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியும்’ - உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் திடீா் நிலைமாற்றம்

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வில் பங்கற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இன்று (செப்.... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார். கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் ப... மேலும் பார்க்க