ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்
தமிழக காவல் துறையில் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யான வி.பாலகிருஷ்ணன், மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நிா்வாகப் பிரிவில் ஐ.ஜி.யாக பொறுப்பு வகிக்கும் அவா், இதற்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தாா். கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தாா். இதற்கு தமிழக அரசின் உள்துறையும் அனுமதி வழங்கியது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணனை நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பாலகிருஷ்ணன் தமிழக காவல்துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, எல்லைப் பாதுகாப்பு படை ஐஜியாக விரைவில் பொறுப்பு ஏற்பாா் என கூறப்படுகிறது.
தமிழக காவல் துறையிலிருந்து டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், ஐ.ஜி. ஆா்.சுதாகா், டி.ஐ.ஜி.-க்கள் ரம்யா பாரதி, பொன்னி ஆகியோா் ஏற்கெனவே, அயல் பணியாக மத்திய அரசு பணிக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.