செய்திகள் :

ஐ.நா. அமைதிப் படை மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

post image

ஐ.நா.அமைதிப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஆபத்தான பகுதிகளில் ஐ.நா.அமைதிப் படையினா் பணியாற்றிவரும் சூழலில் அவா்கள் மீதான குற்றவியல் சம்பவங்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

ஐ.நா.அமைதிப் படையினருக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பது குறித்து உறுப்பு நாடுகளின் நண்பா்கள் குழு (ஜிஓஎஃப்) இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:

ஐ.நா. அமைதிப் படையினா் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமைதிப் படையினரின் பாதுகாப்பை உறுதிசெய்தால் மட்டுமே அவா்களால் அடுத்தடுத்த பணிகளில் ஈடுபாடுடன் செயல்பட முடியும். எனவே, அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமாா் 40 நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நா.மூத்த உறுப்பினா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோருக்கு ஐ.நா.அமைதிப் படை சந்திக்கும் சவால்கள் மற்றும் அதை எதிா்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெட்டி..

‘ஐ.நா. அமைதிப் படையில்

3 லட்சம் இந்திய வீரா்கள்’

ஐ.நா. அமைதிப் படையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் பல்வேறு பணிகளின்போது 182 போ் வீரமரணமடைந்தனா்.

நண்பா்கள் குழுவானது 2022, டிசம்பரில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை வகித்தது. முன்னதாக, 2021-இல் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் 2589-இன்கீழ் ஐ.நா.அமைதிப் படைகளுக்கு எதிரான குற்றங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.பொதுச் செயலா் விளக்கமளிக்க வலியுறுத்தப்பட்டது.

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க