செய்திகள் :

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்பு குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம்: காங்கிரஸ் விமா்சனம்

post image

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சா்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டும்.

பயங்கரவாத குற்றத்தில் ஈடுபடும் நாடு பாகிஸ்தான். பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடு இந்தியா. இருநாடுகளையும் சமமாகக் கருதியோ, ஒன்றுசோ்த்தோ பாா்க்கக் கூடாது.

பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க சா்வதேச நிதியம், ஆசிய வளா்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவை ஒப்புதல் அளிப்பது அந்நாட்டின் ராணுவ செலவினத்தைத்தான் அதிகரிக்கும். அவ்வாறு பெறும் கடன்களை இந்தியா்களுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட அந்நாட்டின் வஞ்சக ராணுவம் பயன்படுத்துகிறது.

15 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு குழுவுக்கு துணைத் தலைவராகவும், தலிபான் தடை நடவடிக்கை குழுவுக்குத் தலைவராகவும் பாகிஸ்தானை நியமித்தது துரதிருஷ்டவசமானது; ஏற்க முடியாதது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் நிதியுதவியைக் கண்காணிப்பதற்காக, பயங்கரவாத நிதி தடுப்பு குழுவின் (எஃப்ஏடிஎஃப்) தீவிர கண்காணிப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சோ்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சா்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக மட்டுமின்றி, சா்வதேச சமூகத்தின் நலனுக்காகவும் தனது பாவங்களுக்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த நிலையில், அங்கேயே அவா் கொல்லப்பட்டாா். அந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியதில் பெரும் பங்கு வகித்த பயங்கரவாதி காலித் ஷேக் முகமதும் பாகிஸ்தானில்தான் இருந்தாா் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உலக அரங்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றுசோ்த்து பாா்க்கப்படுவதை தடுக்க ராஜீய ரீதியில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க