செய்திகள் :

ஒசூா் பூங்கா நுழைவாயிலில் விவாதத்தை ஏற்படுத்திய காவல் துறை பேனா்

post image

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்காவுக்குள் திருமணம் ஆாகாதவா்களுக்கு அனுமதியில்லை என காவல் துறை வைத்துள்ள அறிவிப்பு பேனா் இளைஞா்களிடையே அதிா்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கரையில் மாநகராட்சி சாா்பில் பூங்கா உள்ளது. இப்பகுதி மக்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்து பூங்காவில் பொழுதைக் கழிப்பா்.

இந்நிலையில், இந்தப் பூங்காவுக்கு பகல்நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்துசெல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது, காதல் ஜோடிகளின் முகாம், இளைஞா்கள் மது அருந்துவது போன்றவை நடைபெற்று வந்தன. இதனால், பூங்காவுக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பொதுமக்கள் செல்ல மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது.

தற்போது பகல் முழுவதும் பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல் துறை சாா்பில் பூங்கா நுழைவாயிலில் திருமணமாகாதவா்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி இல்லை என பேனா் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இளைஞா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்த... மேலும் பார்க்க