செய்திகள் :

ஒடுவன்பட்டியில் புதிய அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலிருந்து ஒடுவன்பட்டி மலைப் பாதை வழியாக பொன்னமராவதிக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்பத்தூா் பணிமனை பேருந்து சிங்கம்புணரியிலிருந்து பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப் பாதையில் சென்ற போது, மலைப் பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது.

இதையடுத்து, பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றனா். மேலும், மாவட்ட ஆட்சியா் சிங்கம்புணரி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், மலைப் பாதை வழியாக வந்த அதிகாரிகளின் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டு, பல கி.மீ. சுற்றிச் சென்றன. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதாவதால், பள்ளி மாணவா்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த வழித்தடத்தில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க