செய்திகள் :

ஒட்டன்சத்திரம்: எகிறும் எலுமிச்சை பழம் விலை.. காரணம் என்ன?

post image

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் சூட்டைத்தணிக்கும் வகையிலான இளநீர், சர்பத், தர்ப்பூசணிப்பழம், ஜூஸ் வகைகள், பழங்கள் வியாபாரம் களைகட்டியுள்ளது. இதில் சர்பத் மற்றும் ஜூஸ் போடுவதற்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது.

எலுமிச்சை

தற்போது தமிழகம் முழுவதும் கோயில் திருவிழா காலமாக இருப்பதால், எலுமிச்சை பழங்களின் தேவை இரட்டிப்பாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார மலைகிராமங்களில் நீலமலைக்கோட்டை பகுதி, தேனி மாவட்ட மலைகிராமங்களில் எலுமிச்சை பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. அந்த பழங்கள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை தற்போது 120 ரூபாயாக விற்பனையாகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்

எலுமிச்சை பழ விளைச்சல் குறைந்து வருகிறது. இந்நிலையில் தேவை இருமடங்கு உயர்ந்துள்ளதால், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துவிட்டது. வரும்காலங்களில் கிலோ 150 ரூபாய் கூட உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானல்: காட்டுப்பன்றி தாக்கியதில் 3 பேர் படுகாயம்.. விவசாயிகள் சாலை மறியல்; என்ன நடந்தது?

கோடைவெயில் காரணமாக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் மலை கிராம பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.க... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஜே.ஜனார்த்தனன்,மதுரை.98421 66677 இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவாசனை சீரகச் சம்பா பச்சரிசி.எஸ்.குமரேசன்,கூவம்,திருவள்ளூர்.93453 88725 தோதகத்தி(ரோஸ்வுட்), செம்மரம், மகோகனி,வேங்கை ம... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் கடந்தும்... மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விவசாயத்துக்கான மின் இணைப்பு என்பது காலகாலமாகவே போராட்டம்தான். ஆம்... 1970-களில் தி.மு.க ஆட்சியின்போது மின்கட்டண உயர்வை எதிர்த்து பலவிதமான போராட்டங... மேலும் பார்க்க

Ambani: 600 ஏக்கர், 200 மா வகையில் 1.50 லட்சம் மாமரங்கள்; அம்பானியின் மாந்தோப்பு பற்றி தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி எரிபொருள், மொபைல் சேவை, சில்லறை வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்துள்ளார்.குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அம்பானியின் பெ... மேலும் பார்க்க

நிலக்கடலை, எள், ஆமணக்கு... லாபத்துக்கு வழிகாட்டும் எண்ணெய்வித்து சாகுபடி! மாபெரும் கருத்தரங்கு

எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கிலும், எண்ணெய் வித்து பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் லாபம் எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ‘லாபம் கொடுக்கும் எண்ணெய் வித்துகள் சாகுபடி’ என்ற ... மேலும் பார்க்க

ஏக்கருக்கு ஒன்றரை லட்சம்; நிலக்கடலை, எள், ஆமணக்கு.. லாபம் கொடுக்கும் எண்ணெய்வித்து சாகுபடி பயிற்சி

எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. ஆனால், எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்து பயன்படுத்தும் நிலையில்தான... மேலும் பார்க்க