செய்திகள் :

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ஊழியா்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு

post image

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்) உள்ளதுபோன்று பனிக்கொடை பலன்களை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா். இதற்கான உத்தரவும் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின்போது இத் தகவலை மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களும், மத்திய அரசுப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிக்கொடை வழங்குதல்) விதிகள் 2021-இன் கீழ் பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடை பலன்களைப் பெற தற்போது தகுதியுள்ளவா்கள் ஆகியுள்ளனா்.

அரசு ஊழியா்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது ஓய்வூதிய பலன்களில் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘அரசு ஊழியா்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அல்லது பணியின்போது உயிரிழந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிக் கொடை பலன்கள், தற்போது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அகில இந்திய தேசிய ஓய்வூதிய திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா? தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்!

கரை ஒதுங்கும் அரிய வகை துடுப்பு மீன்கள், இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பே... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்! அமைச்சர் வெளிநடப்பு!

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரதமாதாவின் படம் வைக்கப்பட்டதால், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளிநடப்பு செய்துள்ளார். கேரள ஆளுநர் மாள... மேலும் பார்க்க

12 மணி நேரம் வேலை! கர்நாடக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

கர்நாடகத்தில் ஐடி உள்பட சில துறைகளில் வேலை நேரத்தை 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி அதிகபட்ச வேலை நேரம் 9 மணி... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: நடுவிரலில் மை வைத்து அவமதித்தாக பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் தனது தனது நடுவிரலில் தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே மை வைத்து அவமானப்படுத்திவிட்டதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேற்கு வங்கம், கேரளம்... மேலும் பார்க்க

உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

க்யூஎஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியக் கல்வித் துறைக்குச் சிறந்த செய்தியைக் கொண்டு வந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்... மேலும் பார்க்க

மோசமான வானிலையில் சிக்கிய ஹெலிகாப்டர்! கல்லூரியில் அவசர தரையிறக்கம்!

கேரளத்தில் மோசமான வானிலையில் சிக்கிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர், அங்குள்ள கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான செடாக் ஹெலிகாப்டர் இன்று (ஜூன் 19) ... மேலும் பார்க்க