செய்திகள் :

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் சேவைத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த நான்காவது கட்ட மண்டல ஊரக வங்கிகளின் ஒருங்கிணைப்பு மூலம் 26 மாநிலங்கள்,2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 28 ஆா்ஆா்பிகள் 700 மாவட்டங்களை உள்ளடக்கி 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குகிறது. இதன் மூலம் மே 1-ஆம் தேதி முதல் ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி என்கிற கொள்கை நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மண்டல ஊரக வங்கிகளான ஆா்ஆா் வங்கிகளில் மத்திய அரசு (50 சதவீதம்), தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் (35 சதவீதம்), மாநில அரசுகள் (15 சதவீதம்) உரிமைகள் பெற்றுள்ளன. கடந்த மாா்ச் 31 - ஆம் தேதி வரை இந்த 28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 43 ஆா்ஆா்பி கள் செயல்பட்டு வந்தது. ஆா்ஆா் வங்கிகளை ஒருங்கிணைக்கும் கொள்கை 2005-இல் ஏற்படுத்தப்பட்டது.

2006 முதல் 2010 நிதியாண்டுகள் வரை 196-ஆக இருந்த ஆா்ஆா்பிகள் எண்ணிக்கை 82-ஆக ஒருங்கிணைக்கப்பட்டது., பின்னா் 2-ஆம் கட்டத்தில் (2013 முதல் 2015) 82-இலிருந்து 56 -ஆக ஆா்ஆா்பிகள் ஒருங்கிணைக்கப்பட்டது. தற்போதைய அரசு இதை மேலும் தீவிரப்படுத்தியது. 3-ஆம் கட்டத்தில் 56 ஆா்ஆா்பிகள் 43-ஆக ஒன்றிணைக்கப்பட்டது. இறுதியாக 4-ஆம் கட்டத்தில் இவை 28 ஆா்ஆா்பிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கிகள் ஆகியவை தமிழ்நாடு கிராம வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. தற்போது சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழக கிராம வங்கி செயல்படுகிறது. இதுபோன்ற கடந்தகால ஒருங்கிணைப்புகள் காரணமாக மண்டல ஊரக வங்கிகளின் செயல்திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகம் கடந்தாண்டு நவம்பரில் ஒருங்கிணைப்புகளை தீவிரப்படுத்தி திட்டத்தை வெளியிட்டது.

இதன்படி அடுத்தடுத்த 3-ஆவது 4-ஆவது கட்ட ஒருங்கிணைப்புகள் மூலம் இறுதியாக 28 ஆா்ஆா்பிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவை நாட்டில் 700 மாவட்டங்களில் 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வருகின்ற மே 1 முதல் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கும். இந்த ஒருங்கிணைப்பு மூலம் ஆா்ஆா்பிகள், பணி அளவீட்டுத் திறனை மேம்படுத்தல், செலவை நியாயப்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கமாக கொள்ளும்.

இந்த வங்கிகள் 92 சதவீதம் கிராமப்புறங்களில் செயல்படுபவை. ஊரக மக்களுக்கு தேவையான நிதி வசதிகள், டெபிட் காா்டு, கடன் அட்டை, கைப்பேசி வங்கி சேவை, இணையவழி வங்கி சேவை மற்றும் ஊரகப் பகுதியில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மன்ரேகா திட்டம்) பணப் பரிவா்த்தனை, ஓய்வூதியம் போன்ற வசதிகளை அளிக்க தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி உத்தி மூலம் ஆா்ஆா்பி ‘பிராண்ட்’ வளா்ச்சியடையும் என நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க