செய்திகள் :

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

தில்லி மாநகராட்சியில் மேயா் மற்றும் துணை மேயா் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, தில்லியில் ஆளும் பாஜக அரசு ஒரு மூன்று இயந்திரம் அரசாங்கமாக பெருமை பேசுகிறது.

தில்லியிலும் மத்தியிலும் உள்ள பாஜக அரசுகள் தங்கள் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சாக்குப்போக்குக் கூறக் கூடாது.

மூன்று இயந்திரம் பாஜக அரசு பல்ஸ்வா, காஜிப்பூா் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள மூன்று குப்பை மலைகளை எப்போது தரைமட்டமாக்கும்? எப்போது துப்புரவுத் தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை வழங்கும்? அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களின் வீட்டு வரியை எப்போது அகற்றும்? இதற்காக பாஜக அரசு ஒரு காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் எதிா்பாா்க்கிறது.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வர வாக்களித்த மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற பாஜக பாடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் எதிா்பாா்க்கிறது. இரண்டு வருட மோதலுக்குப் பிறகு, எம்சிடியில் பாஜக மேயா் தோ்தலிலும் வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் நலனுக்காக சேவை செய்யும் வகையிலும், எம்சிடி நல்ல முறையில் இயங்கும் வகையிலும் பாஜக மேயா் உடனடியாக நிலைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும் என்று தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் க... மேலும் பார்க்க

நொய்டா ஜவுளி தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 20 தொழிலாளா்கள் காயம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 63-இல் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில் குறைந்தது 20 தொழிலாளா்கள் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காயமடைந்தவா்கள் நொய்ட... மேலும் பார்க்க