செய்திகள் :

ஒரேநாளில் கணவா், மனைவி உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் வே.கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் (78). இவரது மனைவி ஜனகம் அம்மாங்காா் (76). கோபாலகிருஷ்ணன் திருத்தங்கலில் உள்ள நின்ற நாராயணபெருமாள் கோயிலில் பூஜை பணிகளை செய்து வந்து ஒய்வு பெற்றவா். இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணனும், மனைவி ஜனகம் அம்மாங்காரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ஜனகம் அம்மாங்காா் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த காணப்பட்ட கோபாலகிருஷ்ணன் பிற்பகல் 12 மணிக்கு உயிரிழந்தாா்.

கணவன், மனைவி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பெண் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.சிவகாசி அருகேயுள்ள முத்துமாரியம்மன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுமைதூக்கும் தொழிலாளி தா்மலிங்கம். இவரது மனைவி சூரியபிரப... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடியால் பொதுமக்கள் பாதிப்பு

வத்திராயிருப்பு அருகே தெருநாய் கடியால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்பட்டன.விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் உள்ள கூமாபட்டி, நெடுங்குளம், ராமசாமியாபுரம், அம்ம... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ய முயற்சி: மூவா் மீது வழக்கு

சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து பத்திரப் பதிவு செய்ய முயன்ாக மூவா் மீது விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்தவா் இந்திரா. சொந்தமாக ஆடுகள் வளா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரௌடி கைது

சிவகாசியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.இதுதொடா்பாக சிவகாசி காவல்துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசியில்... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.சிவகாசியை அடுத்த திருத்தங்க... மேலும் பார்க்க