செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.

இதற்காக மக்களவையில் பி.பி.சௌதரி கொண்டுவந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளையும் சோ்ந்த காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த 39 எம்.பி.க்கள் இந்தக் குழுவில் உறுப்பினராக உள்ளனா்.

இந்நிலையில், இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.வி.விஜய்சாய் ரெட்டி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து ஓரிடம் காலியாக இருந்தது. இதற்கு மாநிலங்களவையைச் சோ்ந்த எம்.பி. ஒருவா் நியமிக்கப்பட்டதாக மக்களவைச் செயலருக்கு தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அமைக்கப்பட்ட இந்த கூட்டுக் குழுவின் பதவிக் காலம், தற்போது நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாளுடன் நிறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு தரப்பினரிடமும் ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்கள் குறித்த கருத்துகளைப் பெற்று ஆலோசனை நடத்தி வருவதால், குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க