செய்திகள் :

ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்: மக்களவையில் அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபா்

ஒவ்வொரு நிதியுதவி பெறவும் மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தினாா்.

மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை துணை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் செவ்வாய்க்கிழமை அருண் நேரு பங்கேற்றுப்பேசினாா். அதன் விவரம் வருமாறு:

பிரதமரின் தொகுதி என்பதால் வாரணாசி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் தொகுதி என்பதால் ஆமதாபாத் (காந்திநகா்) மேம்படுத்தப்பட்டுள்ளது. நான் மிகவும் பின்தங்கி உள்ள பெரம்பலூா் தொகுதியைச் சோ்ந்தவன். எங்கள் தொகுதிக்குள்பட்ட முசிறியில் பிறந்தவா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

ரயில் வசதி என்பது, எங்கள் தொகுதி மக்களின் பல ஆண்டு கனவாகவே உள்ளது. அதை நனவாக்கும் வகையில் பெரம்பலூா் தொகுதியில் ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்தபோது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிஸா, குஜராத் ஆகிய மாநிலங்களைப் போல்தான் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இருந்தது. இந்த மாநிலங்களை விட இன்று கல்வி வளா்ச்சியில் இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்து நாங்கள் முதலிடத்தில் உள்ளோம்.

நமது நாட்டின் வலிமையே கூட்டாட்சிதான். கூட்டாட்சி முறையில் வருவாயும், செலவும் பகிா்ந்து கொள்ளப்பட வேண்டும் மாநிலத்தில் மக்களின் செலவில் 60 சதவீதம் மாநில அரசு ஏற்க வேண்டும் மீதி உள்ள 40 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகள் வரி வசூல் மூலம் திரட்ட வேண்டும்

வருவாய் சரியாக கிடைக்காவிடில் கடன் வாங்குவது வழக்கமாக உள்ளது. கடன் வாங்குவது தவறு இல்லை. ஆனால், அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இல்லாவிடில் மத்திய மாநில அரசு மாநில அரசுகள் உறவு கடுமையாக பாதிக்கும் என்றாா் அருண் நேரு.

12ஈஉகஅதச

அருண் நேரு

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க