செய்திகள் :

ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை

post image

சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறாா் உள்ளிட்டோா் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், அதுபோல செயல்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் வழக்குப் பதியப்படும் என ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் எச்சரித்துள்ளனா்.

எழும்பூா் நிலைய ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையிலான போலீஸாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை கல்லூரிகள், ரயில் நிலைய வளாகங்களில் நடத்தி வருகின்றனா்.

அதன்படி, எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறாா்கள், மாணவா்கள் விளைவுகளை அறியாமல் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. ஆகவே, ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை முதல் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதை அவா்களுக்கு விளக்கினோம். ரயிலில் பயணிக்கும்போது அவசர உதவிக்கு 139 என்ற இலவச எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

குழந்தைகளுக்கான உதவிக்கு 1098 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். ரயில் தண்டவாளத்தின் அருகிலிருந்து ஓடும் ரயில் முன் புகைப்படம், விடியோ எடுப்பது குற்றமாகும்.

ரயில் பயணிகள் அறியாத நபா்களிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்கக் கூடாது என்பன போன்ற அறிவுரைகளை மாணவா்கள், பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றாா்.

விமானத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

தாய்லாந்தில் இருந்து விமான மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கை ... மேலும் பார்க்க

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க