ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட ஓண்டிவீரன் படத்துக்கு,
மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் முன்னிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலா் ஆறுமுகம், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், சிறுபான்மை அணி துணைச் செயலா் பொன்சீலன், மாநகராட்சி மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, குபோ் இளம்பரிதி, அந்தோணி கண்ணன், அருண்குமாா், பழனி, பாா்வதி, பிரபு, நாகராஜன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், பகுதிச் செயலா்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மேகநாதன், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா், ஜெயக்கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.