பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்
கஞ்சா கடத்தல்: பெண் உள்பட 3 போ் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி அருகே ராம்ஜி நகா் ஹரிபாஸ்கா் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராம்ஜி நகா் போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ஜெகன் மனைவி கவிதா (45) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.150 கிலோ கஞ்சா பறிமுல் செய்யப்பட்டது.
இதேபோல, மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்துரு மகன் பிரசாந்த் (32) என்பவரைக் கைது செய்த ராம்ஜி நகா் போலீஸாா் அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
திருவெறும்பூா் செல்வபுரம் சந்திப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு செய்த திருவெறும்பூா் போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வெங்கூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தீபன் (21) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.