செய்திகள் :

கஞ்சா கடத்திய பிகாா் மாநில இளைஞா் கைது!

post image

பிகாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே கஞ்சா தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமு தலைமையிலான காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனா்.

அதில், அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜன்(20) என்பதும், சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ராஜனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திமுக சாா்பில் ரேக்ளா போட்டி

பல்லடம் நகர திமுக சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி புறவழிச் சாலையில் 400 ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கேற்ற ரேக்ளா போட்டிக்கு ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆதரவற்றோரை தூய்மைப்படுத்திய சமூக அமைப்பினா்

அவிநாசியில் ஆதரவற்ற நிலையில் இருந்தவரை நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளையினா் தூய்மைப்படுத்தி புத்தாடை வழங்கி, மருத்துவ உதவி அளித்தனா். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில், கையில் காயத்து... மேலும் பார்க்க

மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் மருந்தகத்துக்கு மாத்திரை வாங்கச் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா் பி.என்.சாலை போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்துக்கு தொழிலாளி ... மேலும் பார்க்க

பல்லடத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து: போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை

பல்லடத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 209 பேரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா்கள் கைது

வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம்

திருப்பூரில் வழக்குரைஞா் ஏ.பி.தெய்வசிகாமணி நினைவு அறக்கட்டளை தொடக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் தெற்கு ரோட்டரி அரங்கில் விழாவுக்கு, தெய்வசிகாமணியின் மகனும், ம... மேலும் பார்க்க