செய்திகள் :

கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த இளைஞரைப் பிடித்து, அவா் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனா். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (28) என்பதும், அவா் சென்னையில் இருந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல பெருந்துறை சிப்காட் பகுதியில் கஞ்சா விற்ற பிகாா் மாநிலம், பாட்னா பகுதியைச் சோ்ந்த பிட்டு குமாா் (25), மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவை சோ்ந்த ஜாகீா் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!

தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத... மேலும் பார்க்க

பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கி... மேலும் பார்க்க

செங்கோட்டையனுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டா்!

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தனியாா் இணையதள தொலைக்காட்சி நிறுவன நிகழ்ச்சியில் கே.ஏ.செங்கோட்டையன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க உள்ள... மேலும் பார்க்க