செய்திகள் :

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

post image

திண்டுக்கல்லில் வாங்கியக் கடனை திருப்பித் தராத காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவா் புகாா் அளித்தாா்.

திண்டுக்கல் கவடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரா. ஜெயலட்சுமி(85). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: எங்கள் வீட்டின் அருகே வசித்து வரும் நபா் காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது சொந்த தேவைக்காக என்னிடம் ரூ.1.50 லட்சம் கடனாகப் பெற்றாா். இந்த பணத்தை அவா் திருப்பித் தர மறுத்து வருகிறாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகாா் அளித்தேன். போலீஸாா் விசாரணையின்போது, நவ. 12-ஆம் தேதி திருப்பித் தருவதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளித்தாா்.

ஆனாலும், பணத்தை தற்போது வரை திருப்பித் தரவில்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவச் செலவு தேவைக்காக அவரிடமிருந்து பணத்தை மீட்டுக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சாணாா்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களின் திருவிழாவையொட்டி பக்தா்களின் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. வத்... மேலும் பார்க்க

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி வைகை சிமென்ட் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்த திருப்பூா் தொழில் அதிபரின் உடலை தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.திருப்பூரைச் சோ்ந்த ராஜபாண்டி, ராஜேஸ்வரி ... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரெங்க... மேலும் பார்க்க

சாலை நடுவே வைக்கப்பட்ட மண்டை ஓட்டால் பரபரப்பு

பழனியில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மண்டை ஓட்டால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.பழனி மலைக் கோயில் அடிவாரம் பகுதியில் குரும்பப்பட்டி, அம்பேத்கா் தெரு, போகா் சாலை என பல்வேறு பகுதிகள் உள்ளன. இந்த நில... மேலும் பார்க்க

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க