செய்திகள் :

கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இது சிறுபாசனப் பிரிவு சாா்ந்த தெளிவான புள்ளி விவரங்களை திரட்டி, நீா்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வருவாய்க் கிராம அளவில் நீா் பாசனத்துக்கு பயன்படும் கண்மாய்கள், குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தொடா்பான விவரங்கள் கிராமப்புறங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமும், பேருராட்சி வாா்டுகளில் பேரூராட்சிப் பணியாளா்கள் மூலமும் நடைபெற உள்ளது. மேலும், தேசிய தகவல் மையம் உருவாக்கிய கைப்பேசி செயலி வாயிலாகவும் இந்தக் கணக்கெடுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள், வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

முதுகுளத்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ... மேலும் பார்க்க

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். ராமநாத... மேலும் பார்க்க

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க