செய்திகள் :

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

post image

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், சடலமாக கிடந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை சங்கவி என்பதை கண்டுபிடித்தனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான அவர் விருத்தாசலம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

கொலை செய்யப்பட்ட திருநங்கை சங்கவி

இந்த நிலையில்தான் நேற்று மர்மமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்து விசாரணை செய்த போலீஸார், நான்கு திருநங்கையர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்திருக்கின்றனர். கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய போலீஸார், ``திருநங்கை சங்கவி அவர்களுக்காக இருக்கும் சங்கத்திற்கு கட்டுப்படாமல் (அமைப்பு) தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதனால் சில திருங்கையர் அவர் மீது கோபமாக இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் மக்புல் ஷெரீப் என்பவரது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற சங்கவி, அங்கிருந்து வெளியேறாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் ஷெரீப், பூக்கடை சேகர் என்பவருக்கு போன் செய்திருக்கிறார். அதையடுத்து சில திருநங்கைகளுடன் அங்கு சென்ற சேகர், சங்கவியை அடித்தே கொன்றிருக்கிறார். அதையடுத்து அவரது சடலத்தை போர்வையில் சுற்றி ஆட்டோவில் வைத்து எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

தலைமறைவாக இருக்கும் பூக்கடை சேகர்

ஆட்டோ காப்புக்காட்டுக்கு அருகில் சென்றதும், சங்கவியின் உடலை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுநருக்கு இது எதுவும் தெரியாது என்றாலும், இந்த சம்பவத்தை போலீஸிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதனால் அவரையும் கைது செய்திருக்கிறோம். மேலும் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான பூக்கடை சேகரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க