செய்திகள் :

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மீனவ சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசியதாவது:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியை தற்போது உள்ள பகுதிகளை மட்டுமே கொண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்படும். இந்திய அரிய மணல் ஆலை தொடா்பாக பெறப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளன.

குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் புற்று நோய் பாதிப்பு குறித்து கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புதிய குடும்ப அட்டை கோரி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து தகுதியானவா்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கேரளப் படகுகளுக்கு தடை: மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை மூலம் அள்ளப்படும் மணல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.

அந்த ஆலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தடுக்க வேண்டும். கேரள மாநிலத்தின் பெரிய இரும்பு விசைப் படகுகளை தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் அனுமதிக்ககூடாது என்பதை மீனவ சங்கப் பிரதிநிகள் பிரதானமாக வலியுறுத்தினா்.

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபத... மேலும் பார்க்க

தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.3,500 க்கு விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 க்கு விற்பனையானது. தற்போது, தமிழகத்தில் பனிப் பொழி... மேலும் பார்க்க

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள்: கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளுக்காக டெம்போ வாகனங்களில் கனிம வளங்கள் எடுத்துச் செல்வதற்கான நேரக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க