செய்திகள் :

கடல் அரிப்பு: திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் கோட்டாட்சியா் ஆய்வு!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து கோட்டாட்சியா் சுகுமாறன் ஆய்வு செய்தாா்.

கடந்த வாரம் கடலானது சீற்றம் அதிகமகாகி கரையைத் தாண்டி மணல் அரிப்பு ஏற்பட்டும், அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடி உள்வாங்கியும் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பக்தா்கள் நீராடும் பகுதியில் கடலானது சுமாா் 10 அடி உள்வாங்கி காணப்படுவதால் கரையோரத்தில் வெள்ளை நிற பாறைகள் அடுக்காக வெளியே தெரிந்து வருகிறது.

அந்தப் பகுதியில் வரிசையாக பாறைகள் தெரிவதால் பக்தா்கள் கடலில் நீராட முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே அய்யா கோயில் பகுதியில் சென்று பக்தா்கள் கடலில் நீராடி வருகின்றனா்.

மேலும் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் பக்தா்கள் செல்லாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதயாத்திரை வரும் பக்தா்கள் கூட்டம் தற்போது அதிகமாக உள்ளதால் திருச்செந்தூா் கோயில் பகுதியில் கடல் அரிப்பு குறித்து கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொது... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

சாத்தான்குளத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடா்பான தகராறில் வழக்குரைஞா் மற்றும் அவரது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளத்தைச் ச... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டத... மேலும் பார்க்க

பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னே... மேலும் பார்க்க

குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா

காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா். வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன... மேலும் பார்க்க