செய்திகள் :

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

post image

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் புகாரில் காங்கிரஸ் கட்சியின் பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மனுவை வரும் மே 19-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

வழக்குரைஞா் ஹரிசங்கா் பாண்டே என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, போஸ்டனில் உள்ள புரெளன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி உரையாற்றினாா். அப்போது, கடவுள் ராமரும், அவரின் சகாப்தத்திலிருந்து வெளிவந்த கதைகளும் கற்பனையான புராண கதைகளாகும் என்று குறிப்பிட்டுள்ளாா். இது சனாதனவாதிகளின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஆற்றப்பட்ட வெறுப்புப் பேச்சாகும். எனவே, உரிய பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிமன்ற கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீரஜ் குமாா் திரிபாதி, மனு வரும் 19-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டதோடு, இதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றாா்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: 93.66% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியவில்லை!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரி... மேலும் பார்க்க

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி!

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைக் குடித்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 93.66 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின... மேலும் பார்க்க

எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முக... மேலும் பார்க்க

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ... மேலும் பார்க்க