செய்திகள் :

கடின உழைப்புக்கு பலன்: தேவ்தத் படிக்கல்

post image

ஆர்சிபியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடரில் தனது சவாலான பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

நேற்றிரவு (ஏப்.7) வான்கடே திடலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதியது. இந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்று ஆர்சிபி அசத்தியது.

இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார் தேவ்தத் படிக்கல். ஸ்டிரைக் ரேட் 168.18ஆக இருந்தது.

தேவ்தத் படிக்கல் 2024இல் லக்னௌ அணிக்காக 7 இன்னிங்ஸில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஐபிஎல் 2025க்கான ஏலத்தில் கடைசி நேரத்தில் ரூ.2 கோடிக்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். இது குறித்து போட்டிக்குப் பிறகு தேவ்தத் படிக்கல் கூறியதாவது:

கடின உழைப்புக்கு பலன்

முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. தற்போது, 3-4 ஆண்டுகளில் என்னுடைய தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளேன். இது எளிதான விஷயமில்லை. நீங்கள் சில நேரங்களில் எவ்வளவு முயற்சித்தாலும் அது நிகழ்வதில்லை.

இந்த சீசனில் பேட்டிங்கில் கடினமாக உழைத்துள்ளேன். கடந்த ஆண்டு நினைத்த அளவுக்கு விளையாடவில்லை. என்னை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதை நான் அறிவேன்.

இந்த ஐபிஎல் போட்டிகள் தொடர்வதற்கு முன்பாக என்னுடைய கடின உழைப்பு தற்போது பலனை அளித்துள்ளது.

எங்கு விளையாடினாலும் வெல்லுவோம்

அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமானது. எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள், எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. அப்படித்தான் நாங்கள் சிஎஸ்கே, மும்பை, கேகேஆர் உடனும் விளையாடினோம்.

நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் அந்த நேரத்தில் அதை வெல்ல நினைக்கிறோம். அவ்வளவுதான். ஏனெனில் எந்தத் தருணம் நம்மை தொடரில் கொண்டு செல்லும் என்பது தெரியாது.

நாங்கள் எங்கு சென்றாலும் வெல்ல வேண்டுமென நினைக்கிறோம் என்றார்.

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 16... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் த... மேலும் பார்க்க