செய்திகள் :

'கடைசி 5 நிமிடம் அந்தப் பெண்ணின் மனது... நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது...' - ரிதன்யா குறித்து அம்பிகா

post image

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார்.

ரிதன்யா, கவின்குமார்
ரிதன்யா, கவின்குமார்

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் பெண் ஓர் உயிர். கொடூரமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஆனால் சரியான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் செய்தியைக் கேட்பதற்கே பயமாக இருக்கிறது.

ரிதன்யாவின் பெற்றோர் இடத்தில் இருந்து நான் யோசித்துப் பார்க்கிறேன். மற்ற நாடுகளில் கொடுக்கிற மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும். உடனே தண்டனையைக் கொடுத்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். இனி இன்னொரு உயிர் போகக்கூடாது.

அம்பிகா - ரிதன்யாவின் அம்மா
அம்பிகா - ரிதன்யாவின் அம்மா

ஒருவரின் கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கே சிலர் இங்கு இருக்கிறார்கள். நடந்த கொடுமைக்கு இன்னும் ஏன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய கேள்வி. கடைசி 5 நிமிடம் அந்த பெண்ணின் மனது எவ்வளவு அவஸ்தை பட்டிருக்கும் என நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது" என்று மனவேதனையுடன் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``பாதாள சாக்கடை பிரச்னைய என்கிட்ட சொல்றாங்க; மாநில அரசின் கீழ் வருகிறது என்றால்..'' - கங்கனா ஆதங்கம்

திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் கங்கனா ரனாவத் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் வாழ்க்கை ... மேலும் பார்க்க

நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனாவின் திருமண விழா; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

நடிகர் கிங் காங் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர். ஷங்கர் ஏழுமலை என்ற இவர், கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் அறிமுகமாகி அடையாளமானதால், அப்பெயரி... மேலும் பார்க்க

Sam C.S: "இயக்குநர்கள் இசையை இரைச்சலாக்குகிறார்கள்..." - ஓப்பனாக பேசிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர... மேலும் பார்க்க

Karthi 29: நாளை Take Off ஆகும் கார்த்தி 29; இணையும் மலையாள ஹீரோ; ஹீரோயின் யார் தெரியுமா?

கார்த்தியின் 29வது படத்திற்கான படப்பூஜை நாளை நடக்கிறது. இந்தாண்டில் அவர் சத்தமில்லாமல் 'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வே... மேலும் பார்க்க

Negative Reviews: "படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது" - பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு 'மெய்யழகன்' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பெரிதளவில் பேசப்பட்ட அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, அவருடைய அடுத்த படத்திற்குப் பலரும் காத்திருக்கின்றனர். ... மேலும் பார்க்க