செய்திகள் :

கடையநல்லூா் அருகே கடையில் மைதா மாவு திருட்டு: 2 போ் கைது

post image

கடையநல்லூா் அருகே கடையின் ஓட்டை பிரித்து இறங்கி மைதா மாவு திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகேயுள்ள பேட்டை,மேற்குமலம்பாட்டை தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மைதீன்(52) . வீட்டின் அருகே புரோட்டா கடை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவா், திங்கள்கிழமை காலையில் கடைக்கு வந்தபோது, கடையின் ஓடுகள் உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த 10 கிலோ மைதா மாவை மா்மநபா்கள் திருடி சென்றிருப்பதும், காலியாக இருந்த பணப்பெட்டி திறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அதில், மேலக்கடையநல்லூா் பகுதியை சோ்ந்த லட்சுமணன் (33) ,திருமலைமுத்து(50) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பணப்பெட்டியில் பணம் இல்லாததால் கோபத்தில் மைதா மாவை திருடி சென்ாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனராம்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க